İnsan çevirisi örneklerinden çeviri yapmayı öğrenmeye çalışıyor.
Profesyonel çevirmenler, işletmeler, web sayfaları ve erişimin serbest olduğu çeviri havuzlarından.
தமிழகத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க ரூ. 250 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. நீர் மட்டத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து, பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அதன்படி மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க ஆறு, கண்மாய், வாய்க்கால் போன்ற நீர் வழித்தடங்களிலும், மலை, குன்றுகளில் இருந்து வரும் காட்டோடைகளின் குறுக்கேயும் தடுப்பணை கட்டி நீரை தேக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சுற்றளவில் உள்ள நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். பொதுப்பணித்துறையின் பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு, இதற்கென ரூ. 250 கோடியை ஒதுக்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த பொதுப்பணித்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் ராயப்பன்பட்டி அருகே, முல்லைப் பெரியாற்றில் இரண்டு இடங்களில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர்