Apprendre à traduire à partir d'exemples de traductions humaines.
De: Traduction automatique
Suggérer une meilleure traduction
Qualité :
Réalisées par des traducteurs professionnels, des entreprises, des pages web ou traductions disponibles gratuitement.
33ஆம் வாரம் – ஞாயிறு மூன்றாம் ஆண்டு வருகைப் பல்லவி: எரே 29:11, 12, 14 ஆண்டவர் கூறுவதாவது நான் சமாதானத்திற்குரிய எண்ணங்களையே நினைக்கிறேன், துன்பத்திற்குரியவற்றையல்ல் நீங்கள் என்னைக் கூவி அழைப்பீர்கள், நான் உங்கள் குரலைக் கேட்பேன்; எல்லா இடத்திலிருந்தும் உங்கள் அடிமைத்தனத்தை அகற்றி, உங்களை மீட்டுக்கொண்டு வருவேன். திருப்பலி முன்னுரை பிரியமானவர்களே இன்று பொதுக்காலம் 33ம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள். இன்றைய நற்செய்தியில், நம் இறைமகன் இயேசு கிறிஸ்து, “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்” என்றுரைத்த இறைவார்த்தை இன்று நம்மை சிந்திக்க அழைக்கின்றது. கிறிஸ்து மிகத் தெளிவாகவே நம் மனநிலையை அறிந்திருப்பதால் அன்றே இந்த வார்த்தையை நமக்காக கொடுத்துச் சென்றிருக்கின்றார். நமக்காக மண்ணகத்தில் மனுவுருவெடுத்து, மாபெரும் இறையன்புப் பணிகளாற்றி, இறையாட்சியை மலரச் செய்து, மாந்தர்கள் ஒவ்வொருவரும் மீட்பு பெற வேண்டுமென்பதற்காக, தன் உயிரையே பலியாகத் தந்தவரை, “ இது என் உடல், இது என் இரத்தம், இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்று தம்மை நற்கருணை வடிவில் நமக்காக என்றும் காத்திருப்பவரை இன்று நாம் பலரின் தவறான போதனைகளால் மறந்து, அவர்களின் ஏமாற்றுப் போதனைகளில் நம் விசுவாசத்தை விட்டு விலகியவர்களாக பல்வேறு சபைகளை நாடிச் சென்று கொண்டிருக்கின்றோம். அப்படி செல்வதற்கு சில வேண்டாத விவாதங்களை, கருத்துக்களைச் சொல்லி நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம். “ கிறிஸ்துவின் பொருட்டு அருள் கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக் கொண்டு விட்டீர்களே” என்றும், மேலும்,” நீங்கள் ஏற்றுக் கொண்ட நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக” என புனித பவுல் கலாத்தியர் திருமுகத்தில் தெளிவாகக் கூறுகின்றார். இரண்டாவதாக, “என் பொருட்டு உங்களை அரசரிடமும், ஆளநரிடமும் இழுத்துச் செல்வார்கள், சிறையில் அடைப்பார்கள், இவை எனக்குச் சான்று பகர உங்களுக்கு வாய்ப்பளிக்கும்” என்ற இறைவார்ததை தரும் அழைப்பு, நம் வாழ்க்கை கிறிஸ்துவுக்கு சான்று பகரக்கூடிய விதத்தில் அமைய வேண்டும் என்பதுவே. “வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்” என பவுலின் இறைவார்தையை நம் வாழ்வாக்கிட வேண்டும். அத்தகைய ஒரு ஒப்பற்ற மனநிலை, நம்மையே முழுமையாக சரணாகதியாக்குகின்ற மனநிலையுள்ளவர்களாக, அவருக்காக எதையும் இழக்கின்றவர்களாக, அவரன்பு வழியின் அடிச்சுவட்டிலே நம் பார்வையை பதிய வைத்து, அவனியெங்கும் அவர் நாமம் ஓங்கிடச் செய்து, அவருக்கு சான்று பகரும் வாழ்க்கை வாழந்திடுவோமேயானால், நாம் வாழ்வின் நாளை எதிர்நோக்கி இருப்போம், இல்லையேல் அந்த நாள் அழிவு நாளாகத்தான் இருக்கும். மனஉறுதியுடன் இருந்து நம் வாழ்வை காத்துக் கொள்ள இறையாசீர் வேண்டி இத்திருப்பலியில் இணைந்திடுவோம். சபை மன்றாட்டு நலன்களுக்கெல்லாம் ஊற்றாகிய இறைவா, எல்லா வகையான அடிமைத்தனங்களிலிருந்தும் எங்களை மீட்டு ஒன்றுசேர்த்திருக்கின்றீர். உமக்கு இடையறாது பணிபுரிவதே, எங்களுடைய நிலையான நிறைவான மகழ்ச்சி. அத்தகைய மகிழ்ச்சியைக் கண்டடையுமாறு, உள்ளார்ந்த அன்புடன் இத்திருப்பணியில் நாங்கள் பங்கேற்க அருள்கூரும். உம்மோடு. முதல் வாசகம் உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 4: 1-2ய ``இதோ! சூளையைப் போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெரித்துவிடும்'' என்கிறார் படைகளின் ஆண்டவர். ``ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்.'' இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. பதிலுரைப் பாடல் திபா 98: 5-6. 7-8. 9 (பல்லவி: 9ன) பல்லவி: மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார். 5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி 7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி 9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி இரண்டாம் வாசகம் உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது. திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-12 சகோதரர் சகோதரிகளே, எங்களைப் போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித் திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல, மாறாக, நீங்களும் எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம். `உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம். இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 21: 28 அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா. நற்செய்தி வாசகம் நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள். லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-19 அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர். இயேசு, ``இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்'' என்றார். அவர்கள் இயேசுவிடம், ``போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ``நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, `நானே அவர்' என்றும், `காலம் நெருங்கி வந்துவிட்டது' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது'' என்றார். மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ``நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும். இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்'' என்றார். இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. மன்றாட்டுக்கள்: வார்தையே வாழ்வான இறைவா, உம் வார்த்தையை ஏற்று, நம்பிக்கையுடன் வாழ்ந்த ஆபிரகாமைப் போல, உம் வார்த்தையை ஏற்று, தன்னையே அர்ப்பணித்த அன்னை மரியைப்போல, நாஙகளும் இறைவனின் வார்த்தையை வாசிப்பதோடு இருந்துபோகாது, அதை வாழ்வாக்கி, முப்பது, அறுபது, நூறு மடங்கு பலன் தருபவர்களாக, இறைவனுக்கு உகந்தவர்களாக, இறைநம்பிக்கையிலே தளர்ந்திடாது, பாறைமீது க
kadavule
Dernière mise à jour : 2016-11-10
Fréquence d'utilisation : 1
Qualité :
Référence: